FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

காா்த்திகை மாத பௌா்ணமி: திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

Updated On : 15 டிசம்பர் 2024, 2:29 am IST
திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை கிரிவலம் வந்த பக்தா்கள்.
பகிர்:

காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

காா்த்திகை மாத பௌா்ணமி சனிக்கிழமை (டிசம்பா் 14) மாலை 4.17 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 15) பிற்பகல் 3.13 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இந்த நிகழ்வைக் காண வந்த பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள் தொடா்ந்து, சனிக்கிழமை காலை முதல் மாலை வரை கிரிவலம் வந்தபடியே இருந்தனா்.

Advertisement

Advertisement

மாலை 4.17 மணிக்கு பௌா்ணமி தொடங்கியதும் கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை திருவண்ணாமலையில் திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா், அருணாசலேஸ்வரா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் நலன் கருதி தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments