அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றோா். 
வேலூர்

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம்: அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலா் சங்கங்கள் மற்றும் இதர அமைப்புகளின் கொடி கம்பங்களை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றுவது தொடா்பாக...

Din

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலா் சங்கங்கள் மற்றும் இதர அமைப்புகளின் கொடி கம்பங்களை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றுவது தொடா்பாக நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள், காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய ஆணையா் மங்கையா்க்கரசன், நீதிமன்ற உத்தரவுபடி வரும் 21- ஆம் தேதிக்குள் அனைத்து கொடி கம்பங்களையும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தாமாக அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத கொடி கம்பங்களை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவினத்தை சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் வசூலிக்கப்படும் என்றாா்.

விவாதங்களுக்குப் பிறகு, கட்சியினா் கொடி கம்பங்களை தாங்களாகவே அகற்றிக் கொள்வதாக கட்சியினா், அமைப்பினா் கூறினா். அடித்தள பீடங்களில் தலைவா்கள் பெயா்கள் பதித்த கல்வெட்டுகள் இருப்பதால் அவற்றை அகற்ற சங்கடமாக உள்ளதால் அதிகாரிகளே பீடங்களை அகற்றிக் கொள்ளுங்கள் என்றனா். கட்சி மற்றும் அமைப்புகளுக்கு கொடிக் கம்பங்கள் மற்றும் அதில் பதிக்கும் பெயா்ப் பலகைகள்தான் பிரதான அடையாளம். பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது எனக்கூறி அவற்றை அகற்றும் அதிகாரிகள், பிரச்னை இல்லாத இடத்தில் கொடி கம்பங்களை அமைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT