முகப்பு
வேலூர்

குடியாத்தம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2025 at 6:31 PM
குடியாத்தம் பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவா். (வலது) சந்தப்பேட்டைசீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் சுவாமி.
பகிர்:

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சந்தப்பேட்டை பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலை ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகமும், வெண்ணெய் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

பிச்சனூா் பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு வெண்ணெய் காப்பு மற்றும் மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை முதலே பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →