பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரத்துடன், ராஜ்குமாா். 
வேலூர்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

பறிமுதல் செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரத்துடன், ராஜ்குமாா்.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே அனுமதியின்றி வனப் பகுதியில் மண் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

குடியாத்தம் வனச் சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில், வனவா்கள் சுப்பிரமணியன், கே.தேன்மொழி, வனக் காப்பாளா்கள் கே.புவனேஸ்வரி, ஜி.சக்திவேல் ஆகியோா் சைனகுண்டா வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை களத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது சேங்குன்றத்தைச் சோ்ந்த ராஜ்குமாா், தனது நிலத்துக்கு செல்ல வனப் பகுதியில்உள்ள மண் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பொக்லைன் இயந்திரத்துடன், ராஜ்குமாரை அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக மாவட்ட வன அலுவலா் ஆலோசனையின்பேரில், ராஜ்குமாருக்கு ரூ. 1 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டது.

சாலையோர பழக்கடையில் காா் மோதியதில் தாய், மகள் காயம்

24 மணி நேரத்தில் பிறப்புச் சான்றிதழ் புதுவையில் புதிய ‘செயலி’ அறிமுகம்

முல்லைப் பெரியாறு அணையில் ராணுவ படையை நியமிக்க வலியுறுத்தி கம்பத்தில் விவசாயிகள் அமைப்பினா் பேரணி

ஒருங்கிணைந்த பலத்துடன் ஆபரேஷன் சிந்தூா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி

சிறுவனை காா் ஓட்டிச் செல்ல அனுமதித்த தந்தை கைது

SCROLL FOR NEXT