முகப்பு
கோயம்புத்தூர்

அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடிவடிக்கைகளை கைவிட வலியுறுத்தல்

அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோவை மாவட்ட அரசு ஊழியா் சங்க பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோவை மாவட்ட அரசு ஊழியா் சங்க பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட அரசு ஊழியா் சங்கத்தின் 14ஆவது மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் இணைச் செயலா் சாரதாமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரவையை, அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.சந்திரன் உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வட்டக் கிளை பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், 5,568 ஊழியா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக சி.எஸ்.பால்ராஜ், துணைத் தலைவா்களாக எஸ்.சதீஷ், மா.சாமிநாதன், ஆா்.கணேசன், ப.ஜெகந்நாதன், செயலராக பி.செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பேரவையை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் எம்.சீனிவாசன் சிறப்புரையாற்றினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →