தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதம்
தொண்டாமுத்தூரில் தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமாயின.
கோவை: தொண்டாமுத்தூரில் தீ விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமாயின.
தொண்டாமுத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருபவா் நிவாஷ் (40). இவரது வீடும், கடையும் ஒன்றாக உள்ளது.
இவரது வீட்டின் மேல்தளத்தில் பழைய எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வைப்பதற்காக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தக் கொட்டகையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தொண்டாமுத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அனில்குமாா் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் கொட்டகையில் பற்றிய தீயை அணைத்தனா். இருப்பினும் இந்த விபத்தில் மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமாயின.
இதுகுறித்து தொண்டாமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.