சேலம் அருகே பாலம் அமைக்கும் பணி: 20-ஆம் தேதி வரை ரயில்கள்15 நிமிடங்கள் தாமதமாகச் செல்லும்
சேலம் அருகே பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை சேலத்தில் இருந்து ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அருகே பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை சேலத்தில் இருந்து ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி:
சேலம் ரயில் நிலையம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேலம் நகரத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, சேலத்தில் இருந்து கோவை வழியாகச் செல்லும் ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும்
அதன்படி வண்டி எண் 12648-கோவை-கொங்கு எக்ஸ்பிரஸ், வண்டி எண் 13351-தன்பாத்- ஆலப்புழை, வண்டி எண் 12516-குவாஹட்டி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், வண்டி எண்-12677 பெங்களூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 12675-சென்னை சென்ட்ரல்-கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 12243-சென்னை - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 22637-சென்னை சென்ட்ரல் - மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 15 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். மேலும், கோவை - சேலம் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.