ஒரே வீட்டில் பிடிபட்ட 3 பாம்புகள்
கோவை அருகே ஒரே வீட்டில் 3 கொம்பேறிமூக்கன் பாம்புகள் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டன.
கோவை அருகே ஒரே வீட்டில் 3 கொம்பேறிமூக்கன் பாம்புகள் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டன.
ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது வீட்டின் மேற்கூரையில் பாம்பு இருப்பதாக நேதாஜி பாம்புகள் அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த வீட்டுக்குச் சென்ற சுரேந்திரன் என்பவர் 3 அடி நீளமுள்ள 3 கொம்பேறிமூக்கன் பாம்புகளை உயிருடன் பிடித்து மதுக்கரை வனத் துறையினரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து சுரேந்திரன் கூறியதாவது: இங்கு பிடிபட்டவை கொம்பேறிமூக்கன் பாம்புகளாகும். இவை விஷமற்றவை. சுறுசுறுப்பாகவும் அதிக துடிப்புடனும் ஓடக்கூடியவை. இவை விரைவாக மரம் ஏறக்கூடியவை. இவை பிடிபட்டவுடன் கடிக்கும் தன்மை கொண்டவை. கடிபட்டவர்களுக்கு தலைச் சுற்றல் போன்ற சோர்வு இருக்கும். உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.