நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை...
நாகர்கோவிலில் முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாதுரையின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. இதனால், திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் மக்களிடையே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி புதன்கிழமை (ஏப். 15) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாகர்கோவிலின் வேப்பமூடு சந்திப்பிலிருந்து சாலை வலமாகச் சென்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், பிராசரத்தின் ஒருபகுதியாக வடசேரியில் உள்ள தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அறிஞர் அண்ணாதுரையின் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, நாதக, தவெக மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே நான்கு முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.