கோயம்புத்தூர்

கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

கிருஷ்ண ஜயந்தியையொட்டி அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

கிருஷ்ண ஜயந்தியையொட்டி அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா கடந்த 24-ஆம் தேதி கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து 25-ஆம் தேதி காலை, ஸ்ரீதேவி- பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 
மாலையில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பால், தயிர், வெண்ணெய் உறிகள் அடிக்கப்பட்டன. தொடர்ந்து அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் பிருந்தாவன பஜனை நடைபெற்றது.
நிறைவாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு துவங்கியது. இதில் 40 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் வெந்தயம், உயவு எண்ணெய் தடவிய நிலையில் பக்தர்கள் இரவு 10 மணி முதல் போட்டிபோட்டு ஏற முயற்சி செய்தனர். வழுக்கு மரத்தின் உச்சியில் தேங்காய், பழம், காணிக்கைப் பணம் இருந்தது. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நள்ளிரவு 12 மணியளவில் போட்டியாளர்கள் மரத்தின் உச்சிக்குச் சென்று பண முடிப்பை எடுத்தனர்.  இவ்விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT