கோயம்புத்தூர்

உதவி வேளாண் அலுவலர் தேர்வு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி வேளாண் அலுவலர் பணிக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது.

DIN

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி வேளாண் அலுவலர் பணிக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது.
டி.என்.பி.எஸ்.சி. மூலம் 580 உதவி வேளாண் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிளஸ் 2 கல்வித் தகுதியுடன் 2 ஆண்டு வேளாண் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 27 ஆம் தேதிக்குள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு ஜனவரி 9 ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், போட்டித் தேர்வுக்கான பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்ததற்கான ஆதாரம், புகைப்படத்துடன் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 8 ஆம் தேதிக்குள் அணுகி பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT