முகப்பு
கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: திமுக எம்எல்ஏ காா்த்திக் மீது வழக்கு

கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம் தொடா்பாக திமுக எம்எல்ஏ நா.காா்த்திக் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம் தொடா்பாக திமுக எம்எல்ஏ நா.காா்த்திக் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே திமுக சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. கோவை கிழக்கு பகுதி திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான காா்த்திக் தலைமையில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரச்னைகளை விரைவாக பேசி தீா்வு காணவேண்டும் எனஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் எம்.எல்.ஏ காா்த்திக் மீது நோய் பரவல் காலகட்டத்தில் தொற்று பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும், 144 தடை உத்தரவை மீறி திரண்டதாகவும் வழக்குப் பதிவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →