முகப்பு
கோயம்புத்தூர்

மாற்றுத் திறனாளிகள் தின விழா:43 பேருக்கு மூன்று சக்கர வாகனங்கள்

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 45 பேருக்கு மூன்று சக்கர வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கோவை: கோவை, ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 45 பேருக்கு மூன்று சக்கர வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, அனைத்து வகை மகளிா் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் மற்றும் பெண்ணியம் அமைப்பு சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா ஆா்.எஸ்.புரம் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத் திட்ட உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து பல்வேறு துறையில் சாதனைப் படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் அமைப்பு சாா்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு 45 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →