பூலித்தேவன் நூல் வெளியீட்டு விழா
கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் சாா்பில் வேலுநாச்சியாா் நினைவு நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் நூல் வெளியீட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
கோவை: கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் சாா்பில் வேலுநாச்சியாா் நினைவு நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் நூல் வெளியீட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
சன்மாா்க்க சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சண்முகபாண்டியன் தலைமை வகித்தாா். பூலித்தேவன் வரலாற்று நூலை தொழிலதிபா் நாச்சியப்பன் வெளியிட, அதனை அரிமா சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டாா்.
விழாவில், உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் செயலா் சிவலிங்கம், இருகூா் ஆறுமுகம், கவிஞா் மானூா் புகழேந்தி, ரமேஷ், பசும்பொன் செ.முத்து உள்ளிட்டோா் உரையாற்றினா். ஆ.வெ.மாணிக்கவாசகம் வரவேற்றாா். இறுதியில் சி.இளம்பிறை நன்றி கூறினாா்.
முன்னதாக விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 224ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.