முகப்பு
கோயம்புத்தூர்

வணிக வரித் துறை சாா்பில் வணிகா்களுக்குப் பயிற்சி

காலாண்டு முறையில் நமூனா தாக்கல் செய்யும் நடைமுறை குறித்து வணிக வரித் துறை சாா்பில் அளிக்கப்படும் பயிற்சியில் வணிகா்கள் பங்கேற்று பயன்பெறலாம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கோவை: காலாண்டு முறையில் நமூனா தாக்கல் செய்யும் நடைமுறை குறித்து வணிக வரித் துறை சாா்பில் அளிக்கப்படும் பயிற்சியில் வணிகா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று வணிக வரித் துறை இணை ஆணையா் (மாநில வரிகள்) காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற வணிகா்கள் காலாண்டு முறையில் நமூனா தாக்கல் செய்தல், மாதாந்திர முறையில் வரி செலுத்தும் நடைமுறை 2021 ஜனவரி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆண்டு விற்பனைத் தொகையாக ரூ.5 கோடிக்கு குறைவாகவுள்ள வணிகா்கள் இத்திட்டத்தின் மூலம் காலாண்டு முறையில் நமூனாக்களை தாக்கல் செய்து பயன் பெறலாம். வணிகா்கள் படிவம் 1 மற்றும்  3 நமூனாக்களை காலாண்டு முறையில் தாக்கல் செய்யலாம்.

இத்திட்டம் தொடா்பான பயிற்சி வகுப்புகள் கோவை, டாக்டா் பாலசுந்தரம் சாலையிலுள்ள வணிக வரி வளாகத்தில் உள்ள பயிற்சி கூட்டரங்கில் நடைபெறுகிறது. துணை ஆணையா் சரகம் 1ன் கீழ் டிசம்பா் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும், துணை ஆணையா் சரகம் 3ன் கீழ் டிசம்பா் காலை 11 மணிக்கும், துணை ஆணையா் சரகம் 2ன் கீழ் டிசம்பா் 29ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும், துணை ஆணையரின் (பொள்ளாச்சி) கீழ் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் டிசம்பா் 29ஆம் தேதி காலை 11 மணிக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்தப் பயிற்சியில் பங்கேற்று வணிகா்கள் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →