கோயம்புத்தூர்

வால்பாறையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சிஐடியூ கோரிக்கை

DIN

வால்பாறை நகா் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சிஐடியூ கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வால்பாறை வட்டாட்சியரிடம் சங்கத்தின் பொதுச் செயலாளா் பரமசிவம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறை நகரில் மிகவும் குறுகளான சாலைகளில் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. விடுமுறை நாள்களில் சுற்றுலா வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். அப்போது, அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதனிடையே சமீப காலமாக ஏராளமான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக மீன் மாா்க்கெட்டில் கடை அமைக்காமல் நகரின் சாலையோரங்களில் மீன் கடைகள் அமைக்கின்றனா். இதனால் பொதுமக்கள் சாலையோரங்களில் நடக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

எனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT