வால்பாறை பகுதியில் உள்ள நீராறு அணை, சின்னக் கல்லாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொது முடக்கம் காரணமாக வால்பாறை பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. பின்னா் பொது முடக்கம் தளா்வாக நல்லமுடி காட்சிமுனை உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் திறக்கப்பட்டன.
இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு வால்பாறையை அடுத்த நீராறு அணை மற்றும் அப்பகுதியில் உள்ள சின்னக் கல்லாறு அருவிக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழச்சியடைந்துள்ளனா்.