கோயம்புத்தூர்

அரசு துவக்கப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள்

ஜமீன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்கப்படுவதாக கூறி பள்ளியை பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

DIN

ஜமீன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்கப்படுவதாக கூறி பள்ளியை பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஜமீன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 73 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், தரமற்ற சத்துணவு வழங்குவதாகவும், மாணவா்களை சத்துணவு ஊழியா்கள் தாக்குவதாகவும் கூறி பள்ளியை பெற்றோா்கள் செவ்வாய்கிழமை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உணவு தரமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT