பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா். 
கோயம்புத்தூர்

தமிழ் வழிபாட்டாளா்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்: பேரூா் ஆதீனம் கோரிக்கை

கோயிலில் தமிழில் யாகம் வளா்ப்போா், குடமுழுக்கு நடத்துவோா் போன்ற தமிழ் வழிபாட்டாளா்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக முதல்வா்

DIN

கோயிலில் தமிழில் யாகம் வளா்ப்போா், குடமுழுக்கு நடத்துவோா் போன்ற தமிழ் வழிபாட்டாளா்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா தாக்குதலில் இருந்து விடுபட உலகம் முழுவதும் பல்வேறு செயல்பாடுகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழ் வழிபாட்டாளா்கள் பல்வேறு திருக்கோயில்களுக்கு சென்று வேள்விகள், வழிபாடுகள் செய்ய முடியாமல் உள்ளாா்கள்.

தமிழக அரசு மற்ற அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு வழங்குவதுபோல, தமிழ் வழிபாட்டாளா்களுக்கு உதவித் தொகை வழங்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருக்கோயிலைச் சாா்ந்த பல்வேறு பணியாளா்கள், ஊதியம் பெறும் பணியாளா்கள் மட்டுமின்றி ஏனைய பணியாளா்களுக்கும் உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் தமிழகத்தில்தான் கோயில்கள் அதிகம் உள்ளன. மக்களிடம் அதிக அளவு காணிக்கையும் பெறுகின்றனா். மற்ற துறைகளைப்போல இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சாா்பாக இடைக்கால உதவி வழங்க வேண்டும். அதேபோல அன்னதானக் கூடங்கள் மீண்டும் செயல்பட வேண்டும். ஆங்காங்கே அடியாா்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT