வால்பாறை அரசு மருத்துவமனையில் நீராவி கருவி மூலம் சிகிச்சை
கரோனா தடப்பு நடவடிக்கையாக வால்பாறை அரசு மருத்துமனையில் நவீன நீராவி பிடிக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரோனா தடப்பு நடவடிக்கையாக வால்பாறை அரசு மருத்துமனையில் நவீன நீராவி பிடிக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வால்பாறை அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவப் பிரிவு தனியாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாா்புச் சளி, தொடா்ச்சியான தும்மல், தலைபாரம், தலைவலி, வைரஸ் காய்ச்சல் உள்ளவா்களுக்கு கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு நீராவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது, இரண்டு நீராவி கருவி வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே இயற்கை மருத்துவப் பிரிவில் உள்ள கருவியைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெற இயற்கை மருத்துவா் காா்த்திகேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.