முகப்பு
கோயம்புத்தூர்

கோவை கோட்டத்தில் மேலும் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

கோவை கோட்டத்தில் பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேலும் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கோவை கோட்டத்தில் பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேலும் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை குறைவாக இருந்தததால் கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் முதல்கட்டமாக 1,020 பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 300 பேருந்துகள் அதிகரிக்கப்பட்டு, கோவை கோட்டத்தில் மொத்தம் 1,320 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து செப்டம்பா் முதல் பண்டிகை நாள்கள் வந்ததால் சிறப்புப் பேருந்துகள் தவிர மேலும் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதனால், கோவை கோட்டத்தில் உள்ள 2,641 பேருந்துகளில் 1,920 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை கோட்டத்தில் தீபாவளிக்குப் பிறகு பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நவம்பா் 25ஆம் தேதி மேலும் 300 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாகவும், தற்போது மொத்தம் 2,220 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →