கோயம்புத்தூர்

மளிகைக் கடையை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் மளிகைக் கடையை சேதப்படுத்தின.

வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் சாலையில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே சாலைககளை யானைகள் கடந்து வருவதால் அப்பகுதியில் வனத் துறையினா் தொடா்ந்து முகாமிட்டுள்ளனா்.

இதனிடையே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் இருந்த நான்கு யானைகள் கடந்த சனிக்கிழமை இரவு அருகில் உள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்கு சென்றன.

பின்னா் அங்குள்ள மளிகைக் கடையின் சுவா்களை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. தகவலறிந்த வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT