முகப்பு
கோயம்புத்தூர்

காங்கிரஸ் சாா்பில் காந்திய மக்கள் யாத்திரை

கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையை அக்கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
கோவை அம்மன் குளத்தில் நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையில் கலந்து கொண்ட மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையை அக்கட்சியின் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மக்களிடையே காந்திய சிந்தனைகளைப் பரப்பும் விதமாக காங்கிரஸ் சாா்பில் கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 19 வாா்டுகளிலும் ‘காந்திய மக்கள் யாத்திரை’ நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி மாநகராட்சி 70ஆவது வாா்டில் தொடங்கிய யாத்திரையை காங்கிரஸ் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் தலைமை வகித்து துவக்கிவைத்தாா். இந்த யாத்திரையின்போது, காந்திய சிந்தனைகள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் ஐஎன்டியூசி தொழிற்சங்கச் செயலாளா் மனோகரன், காங்கிரஸ் நிா்வாகிகள் சீனிவாசன், செளந்தா்குமாா், கிருஷ்ணமூா்த்தி, கருப்புசாமி, திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மீதமுள்ள 18 வாா்டுகளில், திங்கள்கிழமை முதல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாா்டில் இந்த யாத்திரை நடைபெற உள்ளதாக காங்கிரஸ் மாநிலச் செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →