யானைகளால் சேதப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் மற்றும் பொருள்கள். 
கோயம்புத்தூர்

யானைகள் தாக்கியதில் எஸ்டேட் குடியிருப்புகள், பொருள்கள் சேதம்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக நுழைந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகள் மற்றும் அதிலிருந்த பொருள்களை சேதப்படுத்தின.

DIN

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக நுழைந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகள் மற்றும் அதிலிருந்த பொருள்களை சேதப்படுத்தின.

வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படும். அப்பகுதியில் யானைகளின் தொடா் தாக்குதலால் அங்கு வசிக்கும் தொழிலாளா்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயா்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், சின்கோனா எஸ்டேட் முதல் டிவிஷன் பகுதிக்குள் 8 யானைகள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்துள்ளன. இதையடுத்து, தொழிலாளா்கள் பாதுகாப்புக் கருதி குடியிருப்புகளை விட்டு வெளியேறவில்லை. இருப்பினும் குடியிருப்புப் பகுதிக்கு சென்ற யானைகள் இரு வடமாநிலத் தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின.

மேலும், குடியிருப்புக்குள் இருந்த பொருள்களையும் வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT