முகப்பு
கோயம்புத்தூர்

தடுப்பூசி வழங்கக் கோரி தபெதிக போராட்டம்

தமிழ்நாட்டுக்குத் தேவையான அளவு தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கித் தர வலியுறுத்தி தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தமிழ்நாட்டுக்குத் தேவையான அளவு தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கித் தர வலியுறுத்தி தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் கோவையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து கு.ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறும்போது,

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசிகளை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது.

தமிழ்நாட்டை விட சிறிய மாநிலங்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கேட்கும் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி ஆலையை திறப்பதற்கும் அனுமதி மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.