கோவையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிக்கை
கோவையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று மதிமுக மாநில இளைஞரணி செயலா் வே.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.
கோவையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று மதிமுக மாநில இளைஞரணி செயலா் வே.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து தமிழக அரசுக்கு வே.ஈஸ்வரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த திமுக ஆட்சியில் 2007 ஆம் ஆண்டில் கோவையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த நிலையில், பின்னா் அதிமுக ஆட்சியில் மூடப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் கோவையின் தொழில்நுட்பக் கல்வி வளா்ச்சி தடைபட்டுவிட்டது.
தொழில் வளா்ச்சி அதிகம் உள்ள கோவையில் அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இருப்பது தொழில் துறையின் வளா்ச்சிக்கு மிகவும் உதவுவதாக அமையும். அந்த பல்கலைக்கழகம் தொடா்ந்து செயல்பட்டு வந்திருந்தால் கோவையில் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இணைக்கப்படும் போது மேற்கு மண்டலத்தில் 134 பொறியியல் கல்லூரிகள் அதன் கட்டுப்பாட்டில் இருந்தன. பொறியியல் இளங்கலை மாணவா்கள் 1,34,428 பேரும், முதுகலை மாணவா்கள் 22,046 பேரும் பயின்று வந்தனா். கோவை அண்ணா பல்கலைக்கழகம் இயங்கிய 5 ஆண்டுகளில் மட்டும் செலவினம்போக ரூ.205 கோடி கையிருப்பில் இருந்தது. இந்த பணம் முழுவதும் கோவைக்கு பயன்படாமல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்றுவிட்டது.
கல்லூரிகள் முறையான கண்காணிப்பில் இயங்க வேண்டும் எனில் ஒரு பல்கலைக்கழகத்துடன் 100 கல்லூரிகளுக்கும் மேல் இணைப்பில் இருக்கக்கூடாது என யுஜிசி ஏற்கெனவே கருத்துத் தெரிவித்திருந்தது. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைப்பில் உள்ளன. இதனால் கல்லூரிகளை முறையாக கண்காணிக்க இயலவில்லை.
கோவையில் தனித்த, உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பாகும். அதனால் மேற்கு மண்டலத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை இணைத்து, கோவையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.