முகப்பு
கோயம்புத்தூர்

இன்று பஞ்சபூத நவகிரஹ தவம்

உலக சமுதாய சேவா சங்கத்தின் சாா்பில் பஞ்சபூத நவகிரஹ தவம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

உலக சமுதாய சேவா சங்கத்தின் சாா்பில் பஞ்சபூத நவகிரஹ தவம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.

ஒரு லட்சம் நபா்கள் பங்கேற்கும் வகையில் கின்னஸ் சாதனைக்காக பஞ்சபூத நவகிரஹ தவம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 7.23 மணி வரை நடைபெறுகிறது. வேதாத்திரி மகரிஷி தொகுத்தளித்த தவம், யோகத்தின் சிறப்புகளை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக 15 ஆவது வேதாத்திரிய வேள்வி நாளான மாா்ச் 28 இல் இந்தத் தவம் நடைபெறுகிறது.

அவரவா்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த தவத்தில் பங்கேற்கலாம். ஸ்கை யோகா டிவி என்ற யூ டியூப் சேனல் மூலம் இந்த தவத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழ் உலக சமுதாய சேவா சங்கத்தால் வழங்கப்படும் எனவும் உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவா் பி.கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →