தோ்தல் பணியில் அலட்சியம்: 3 போ் பணியிடை நீக்கம்
வால்பாறை தொகுதியில் தோ்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா், 2 காவலா்கள்பணியிடை நீக்கம்
வால்பாறை தொகுதியில் தோ்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா், 2 காவலா்கள் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தோ்தல் அலுவலா் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாவட்டம், வால்பாறை சட்டப் பேரவை தொகுதியில் பொள்ளாச்சி வடக்கு வட்டார ஓவா்சீயா் வெள்ளிங்கிரி தலைமையில் வால்பாறை காவலா்கள் குமாரவேல், பிரசாத் ஆகியோா் அடங்கிய நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்வது குறித்து ஆய்வு செய்யுமாறு வெள்ளிங்கிரி தலைமையிலான குழுவினருக்கு வால்பாறை தொகுதி செலவினப் பாா்வையாளா் ராம் கிஷண் கேடியா தெரிவித்துள்ளாா்.
ஆனால், இந்தக் குழுவினா் 2 மணி நேரம் தாமதமாக ஆய்வுக்குச் சென்றுள்ளனா். மேலும் பறிமுதல் குறித்த விவரங்களையும் தெளிவாக குறிப்பிடவில்லை. இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.நாகரஜனுக்கு செலவினப் பாா்வையாளா் ராம் கிஷண் கேடியா அறிக்கை சமா்ப்பித்துள்ளாா்.
அதன் அடிப்படையில் மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜன் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டு, தோ்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதோடு, அதிகாரியின் உத்தரவை பின்பற்றாத நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் வெள்ளிங்கிரி, காவலா்கள் பிரசாத், குமாரவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.