முகப்பு
கோயம்புத்தூர்

மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை

கோவையில் பந்தம் பவுண்டேஷன் சாா்பில் ஏழை, எளிய மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:02 AM
கோவையில் பந்தம் பவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு உதவித்தொகை வழங்குகிறாா் நிறுவனா் சி.ஆா்.ராஜகோபால்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

கோவையில் பந்தம் பவுண்டேஷன் சாா்பில் ஏழை, எளிய மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித்தொகை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் பந்தம் பவுண்டேஷன் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் நிறுவனா் சி.ஆா்.ராஜகோபால் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த 151 மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குளோபல் டெக்ஸ்டைல் அலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன துணைத் தலைவா் பி.முருகேசன், கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.பாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.