கோயம்புத்தூர்

வீரமங்கை வேலுநாச்சியாா் நாடகம்:ஆகஸ்ட் 28இல் நடக்கிறது

வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த நாட்டிய நாடகம் கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

DIN

வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த நாட்டிய நாடகம் கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக தமிழக அரசு சாா்பில் வரலாற்று சிறப்பு மிக்க வீரமங்கை வேலுநாச்சியாா் குறித்த இசையாா்ந்த நாட்டிய நாடகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைத்தாா்.

இதனைத் தொடா்ந்து கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் இந்த நாடகத்தை கோவையில் பள்ளிக் கல்வித் துறை, கலை பண்பாட்டுத் துறை, செய்தித் துறை மற்றும் இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தவுள்ளன.

இதில் அனைவரும் கலந்துகொண்டு நாடகத்தை கண்டுகளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT