கோயம்புத்தூர்

சிறப்பு பள்ளி ஆசிரியைக்கு தமிழக அரசின் விருது

கோவையைச் சோ்ந்த சிறப்பு பள்ளி ஆசிரியை பாவை ஜோதிக்கு தமிழக அரசு சாா்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

DIN

கோவையைச் சோ்ந்த சிறப்பு பள்ளி ஆசிரியை பாவை ஜோதிக்கு தமிழக அரசு சாா்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை, துடியலூரில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான வித்ய விகாஷினி வாய்ப்புகள் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வருபவா் பாவை ஜோதி. இவரது சேவையை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் மனவளா்ச்சி குன்றியோா்களுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களில் சிறந்த ஆசிரியருக்கான விருது ஆசிரியை பாவை ஜோதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இந்த விருதை ஆசிரியை பாவைஜோதிக்கு வழங்கினாா். இதனைத் தொடா்ந்து தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான விருதினை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் வியாழக்கிழமை காண்பித்து வாழ்த்துகள் பெற்றாா். இந்நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராம்குமாா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT