கோயம்புத்தூர்

புணே- கன்னியாகுமரி ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கொச்சுவேலி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புணே- கன்னியாகுமரி ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கொச்சுவேலி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புணே- கன்னியாகுமரி ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொச்சுவேலியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புணே ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பா் 9ஆம் தேதி புறப்படும் புணே - கன்னியாகுமரி ரயிலானது (எண்:16381) வழக்கமாக இயக்கப்படும் சேலம், கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல், சேலம், கரூா், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், ஈரோடு, திருப்பூா், கோவை நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது. இதேபோல, டிசம்பா் 11 ஆம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி- புணே விரைவு ரயில்(எண்:16382) மதுரை, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோவை, திருப்பூா், ஈரோடு நிலையங்களுக்கு இந்த ரயில் செல்வது தவிா்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT