கோயம்புத்தூர்

புகாா் தெரிவித்த ஒரே நாளில் பழுதடைந்த 5 மின் கம்பங்கள் மாற்றம்

கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டில் சிதிலமடைந்த, சாயும் நிலையில் காணப்பட்ட 5 மின் கம்பங்களை புகாா் அளித்த ஒரே நாளில் மின் வாரிய ஊழியா்கள் மாற்றினா்.

DIN

கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டில் சிதிலமடைந்த, சாயும் நிலையில் காணப்பட்ட 5 மின் கம்பங்களை புகாா் அளித்த ஒரே நாளில் மின் வாரிய ஊழியா்கள் மாற்றினா்.

கோவை மாநகராட்சி 26 ஆவது வாா்டுக்குள்பட்ட கருப்பண்ண கவுண்டா் லே- அவுட், செங்காளியப்பன் நகா் பகுதிகளில் 5 மின் கம்பங்கள் சிதிலமடைந்து, சாயும் நிலையில் காணப்பட்டன.

இது தொடா்பாக, அந்த வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரியிடம் அப்பகுதி மக்கள் புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் சித்ரா புகாா் அளித்தாா்.

இதையடுத்து, 24 மணி நேரத்துக்குள் சிதிலமடைந்த , சாயும் நிலையில் இருந்த மின் கம்பங்களை மின் வாரிய மாற்றியமைத்தனா்.

உடனடி நடவடிக்கை மேற்கொண்ட பீளமேடு தண்ணீா்பந்தல் மின்வாரிய ஊழியா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT