கோயம்புத்தூர்

நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக முகநூல் பதிவு: கோவை இளைஞர் கைது

DIN

கோவை: நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக முகநூல் பதிவிட்ட கோவையை சேர்ந்த ஏ.பி.வி.பி  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட நூபுர் சர்மாவை கைது செய்ய கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது உத்தர பிரதேச மாநிலத்திலும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை சென்னனூரை  சேர்ந்த  ஏ.பி.வி.பி நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான கார்த்திக் (26) என்ற இளைஞர், தனது முகநூலில் நுபுர் சர்மாவை ஆதரித்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT