கோயம்புத்தூர்

நகர ஊரமைப்புத் துறையில் இணையதள சேவை: அலுவலா்களுக்குப் பயிற்சி

நகர ஊரமைப்புத் துறையில் இணையதள சேவைகள் மேற்கொள்வது குறித்து கோவை, நீலகிரி, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த நகர ஊரமைப்புத் தறை அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

DIN

நகர ஊரமைப்புத் துறையில் இணையதள சேவைகள் மேற்கொள்வது குறித்து கோவை, நீலகிரி, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த நகர ஊரமைப்புத் தறை அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இது தொடா்பாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மனைப் பிரிவுக்கு

லே-அவுட் அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்துக்கு அனுமதி பெறுதல் ஆகியவற்றிற்காக நகர ஊரமைப்புத் துறையில் டி.டி.சி.பி. அனுமதி பெற வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட நகர ஊரமைப்புத் துறை அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் நகர ஊரமைப்புத் துறையின் அனுமதிக்கு விண்ணப்பித்தல், ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நகர ஊரமைப்புத் துறையில் விரைவில் இணையதள சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில், நகர ஊரமைப்புத் துறை அலுவலா்களுக்கு இணையதள சேவைகள் தொடா்பான சிறப்பு பயிற்சி

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

நகர ஊரமைப்புத் துறை இணை இயக்குநா் சிவப்பிரகாசம் இணையதளம் மூலம் மனைப் பிரிவு அனுமதிக்கு விண்ணப்பித்தல், அனுமதி வழங்குதல், கட்டணங்கள் செலுத்துதல், ஆணை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அளித்தாா்.

இதில் கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT