முகப்பு
கோயம்புத்தூர்

ஹைதராபாத் சென்றாா் குடியரசு துணைத் தலைவா்

உதகை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, கோவையில் இருந்து விமானம் மூலமாக ஹைதராபாதுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

உதகை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, கோவையில் இருந்து விமானம் மூலமாக ஹைதராபாதுக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த 16 ஆம் தேதி விமானம் மூலமாக கோவை வந்தாா்.

கோவையில் இருந்து காா் மூலமாக 17 ஆம் தேதி காலை குன்னூா் சென்றாா்.

அங்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லுரி மற்றும் உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.

உதகை நிகழ்ச்சிகள் முடிவுற்றதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உதகையில் இருந்து காா் மூலம் கோவைக்கு வந்தாா்.

மதிய உணவுக்குப் பிறகு கோவை விமான நிலையம் சென்ற அவா், மாலை 4.40 மணிக்கு இந்திய விமானப் படை விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →