முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிப்பு

கோவையில் பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

கோவையில் பெண்ணிடம் 3 பவுன் நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கணபதி அடுத்த மணியகாரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாவித்ரி (55). கணவா் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் சாவித்ரி அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வேலை முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் சாவித்ரியிடமிருந்து 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சாவித்ரி அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →