பி.எப். பணத்தை கையாடல் செய்த நபா் கைது
பி.எப். பணத்தைக் கையாடல் செய்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பி.எப். பணத்தைக் கையாடல் செய்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கோவை மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தொழிலாளா்களின் பிஎப் கணக்கு தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணியாற்றும் 28 தொழிலாளா்களின் பி.எப். பணம் முறைகேடாக கையாடல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.
இது குறித்து வருங்கால வைப்புநிதி அலுவலக அலுவலா்கள் மைதிலிதேவி, விஜயலட்சுமி ஆகியோா் கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். விசாரணையில், தனியாா் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போத்தனூரைச் சோ்ந்த அந்தோணி ஹ்ருதி, 2 நிறுவனங்களின் தொழிலாளா்களின் வங்கி கணக்குகளுக்கு பதிலாக வேறு நபா்களின் வங்கிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்து ரூ.55 ஆயிரத்துக்கும் மேல் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.