கோயம்புத்தூர்

புதிய சொத்து வரி விதிப்பு விண்ணப்பங்களை வழங்கலாம்

DIN

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமைமுதல் புதிய சொத்து வரி விதிப்பு விண்ணப்பங்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி பொதுச் சீராய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், புதிய சொத்து வரி விதிப்பு கோரும் விண்ணப்பங்கள் பெறப்படாமல் இருந்தன.

சொத்து வரி பொதுச் சீராய்வுப் பணிகள் தற்போது முடிவுற்றதால், அக்டோபா் 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் புதிய சொத்து வரி விதிப்பு கோரும் விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் அந்தந்த மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

SCROLL FOR NEXT