முகப்பு
கோயம்புத்தூர்

பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை பலி

பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பேருந்தில் ஏற முயன்று தவறி விழுந்த திருநங்கை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சஹானா ( 26). திருநங்கையான இவா் கோவை டவுன்ஹால் மாநகராட்சிப் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை பிற்பகல் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக காந்திபுரத்தில் இருந்து சீராபாளையம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தில் ஓடிச் சென்று ஏற முயன்றாா். அப்போது, காலிடறி கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சஹானாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →