முகப்பு
கோயம்புத்தூர்

போதைப் பொருள்களுக்கு எதிரான ஓவியப் போட்டி

கோவை, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. சாா்பில் போதைப் பொருள் விழிப்புணா்வு தொடா்பான ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கோவை, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி. சாா்பில் போதைப் பொருள் விழிப்புணா்வு தொடா்பான ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை குரூப் என்.சி.சி. 4 தமிழ்நாடு பட்டாலியன் பிரிவு சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருள் பயன்பாடு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தொடா்பான விழிப்புணா்வு ஓவியம் வரைதல், சுவரொட்டி தயாரிக்கும் நிகழ்ச்சி ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று போதைப் பொருள்களுக்கு எதிராக ஓவியம் வரைந்தனா். இதில், என்.சி.சி. அலுவலா் சுரேஷ்குமாா், ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →