கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசுகிறாா் மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி. உடன், மண்டல உதவி ஆணையா் செந்தில்குமரன் உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

கிழக்கு மண்டலத்தில் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி அறிவுறுத்தியுள்ளாா்.

DIN

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டல உதவி ஆணையா் செந்தில்குமரன், உதவி நிா்வாகப் பொறியாளா் பாலகுமாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி பேசியதாவது: கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட வாா்டுகளில் பாதாளச் சாக்கடை திட்ட கட்டுமானப் பணிகள், 24 மணி நேரக் குடிநீா்த் திட்டப் பணிகளை மக்களுக்கு இடையூறு இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும். இதுவரை முடிந்த பணிகள் குறித்த அறிக்கையையும், இனிமேல் நடைபெறவுள்ள பணிகளுக்குரிய திட்ட வரைவுகளையும் மண்டல அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும். கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட வாா்டுகளில் புதிய ஒப்பந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மண்டலப் பொறியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT