முகப்பு
கோயம்புத்தூர்

காவல்துறை சாா்பில் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 6:58 PM
குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் விசாரணை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.
பகிர்:

கோவை: காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற முகாமில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பாக 86 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், 69 மனுக்களுக்கு சுமுகத் தீா்வு காணப்பட்டது. மேலும், 3 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டது. 14 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →