கோப்புப்படம் 
கோயம்புத்தூர்

கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.

DIN

கோவை: கனமழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன் 20) விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பேடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வரும் 25-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT