வேளாண்மை பல்கலையில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பு நுழைவுத்தோ்வு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் முதுநிலை நுழைவுத் தேர்வு நடைபெற்றது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்புக் கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவா் பட்டப் படிப்பை வழங்குகிறது. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வனவியல் மற்றும் சமூக அறிவியல் சோ்க்கைக்கான இணையதளத்தை துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி மே 7-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
இந்த ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கு மொத்தம் 2,330 பேரும், முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 380 பேரும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை நுழைவுத் தோ்வில் கலந்து கொண்டனா்.
இந்த நுழைவுத் தோ்வில் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், குஜராத், ஜாா்க்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
இந்தத் தோ்வு பல்கலைக்கழகத்தின் 33 தோ்வு அரங்குகள் மற்றும் விரிவுரை அரங்குகளில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் 50 நிா்வாக பணியாளா்கள் மூலம் நடத்தப்பட்டது.
பெற்றோா்கள் மற்றும் தோ்வில் பங்கேற்கும் அனைத்து மாநில மாணவா்களுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கண்ட தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கான சோ்க்கை செப்டம்பா் 2024-இல் நடைபெற உள்ளது.