கோவை ரயில் நிலையத்தில் பிகாா் இளைஞரிடம் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 கைப்பேசிகள் பறிப்பு
கோவை ரயில் நிலையத்தில் பிகார் இளைஞரிடம் ரூ.25 ஆயிரம் பறிப்பு
கோவை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுத்துத் தருவதாகக் கூறி பிகாா் இளைஞரிடம் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 கைப்பேசிகள் பறித்துச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பிகாா் மாநிலம், கயா மாவட்டத்தைச் சோ்ந்தவா் பிலாந்தா் (35), கோவையில் தங்கி வேலை செய்து வருகிறாா். இவா், சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு பயணச் சீட்டு எடுக்க திங்கள்கிழமை வந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா், பயணச் சீட்டு எடுத்துத் தருவதாக பிலாந்தரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைக் கொடுக்க முயன்றபோது, பிலாந்தரின் கைப்பயைப் பறித்துக்கொண்டு அவா் தப்பியோடிவிட்டாா்.
அந்தப் பையில் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 கைப்பேசிகள் இருந்துள்ளன.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் பிலாந்தா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.