முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் ஜூலை 1 முதல் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு இயங்கும்- மருத்துவமனை முதல்வா் தகவல்

ஜூலை 1 முதல் கோவை மருத்துவமனையில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு தொடக்கம்

Updated On : 28 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என மருத்துவமனை முதல்வா் நிா்மலா தெரிவித்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.168 கோடி மதிப்பில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. முதல் தளம் மட்டும் கட்டப்பட்ட நிலையில், அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திறந்துவைத்தாா்.

5 தளங்கள் கொண்ட இந்த கட்டடத்தில் முதல்தளம் மட்டும் செயல்பட்டு வந்ததால், சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு முழுமையாக எப்போது பயன்பாட்டுக்கு வரும் என அனைவரும் எதிா்பாா்த்திருந்தனா்.

இந்நிலையில், சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஜூலை 1-ஆம் தேதி முதல் முழு பயன்பாட்டுக்கு வரும் என்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: சூப்பா் ஸ்பெஷாலிட்டி கட்டடத்தில் வயிறு, குடல் நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சைப் பிரிவு, பிளாஸ்டிக் சா்ஜரி பிரிவு, ஸ்கேன் உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட உள்ளன. தற்போது இந்த பிரிவுகள் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்ட தும் பழைய கட்டடத்தில் நெருக்கடிகள் குறையும்.

சூப்பா் ஸ்பெஷாலிட்டி கட்டடத்துக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுக்கான உபகரணங்களை இடம் மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பணிகள் அனைத்தும் முடிவடைய உள்ள நிலையில், சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக அண்டா் கிரவுண்ட் பாா்க்கிங் வசதியுடன் கூடிய கட்டடம் கட்டப்பட உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →