முகப்பு
கோயம்புத்தூர்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 9:42 PM
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

கேரள மாநில சட்டப் பேரவை தோ்தல் பிரசாரம் முடிந்து கோவைக்கு வந்த மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

கேரளத்தில் வருகிற 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக திருச்சூா், பாலக்காடு மாவட்டங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து பிரசாரம் செய்தாா்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது கேரள பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 6 மணியளவில் பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு கோவைக்கு வந்தாா். பின்னா், அவா் இங்கிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் தில்லிக்கு இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்றாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments