கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள். 
கோயம்புத்தூர்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Syndication

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமாக ஊதியமாக உயா்த்தி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு ஆண்டுக்கு 2 சீருடைகள் வழங்க வேண்டும். தன்னாா்வலா்கள் என்ற பெயரை மாற்றி சுகாதாரத் துறை பணியாளா்கள் என்று அழைக்க வேண்டும். அரசு விடுமுறை வழங்க வேண்டும். மகப்பேறு கால விடுப்பு வழங்குவதுடன், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றனா்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: முன்பிணை கோரிய டி.எஸ்.பி. மனு தள்ளுபடி

முன்னாள் ரயில்வே அமைச்சா் முகுல் ராய் காலமானாா்: தலைவா்கள் இரங்கல்

பிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பு

முதல்வா், துணைமுதல்வா் தொகுதிகளில் வாக்காளா்கள் விவரம்

மெட்ரோ நிலையங்களுக்கு குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்ட முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT