பவானி திருவள்ளுவர் நகரில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி திறப்பு
பவானி நகராட்சி 7-ஆவது வார்டு திருவள்ளுவர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
பவானி நகராட்சி 7-ஆவது வார்டு திருவள்ளுவர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
இப் பகுதியில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ரூ.8.50 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான், முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் எம்.ஆர்.துரை, என்.ராஜேந்திரன், உறுப்பினர்கள் ஏ.முத்துசாமி, மோகன், ராஜேந்திரன், செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.